CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

காலமும் காதலும்

காலம் ஓடிக்கொண்டிருக்கட்டும்

நாமும் அதனோடு...

எட்டு வருடம் முன்

நினைக்க சந்தோசமாய்த்தானிருந்தது

அது

இன்று அதீதமாய்.,

 

காதலை கொட்டி வைக்க

தேடிய நேரம் அது

பூக்கூடையாய் நீ.,

 

அப்போது கொட்டி வைத்த

பூக்கள் இன்று

என்மேல் அர்ச்சனைக்காய்.,

சிறு,பெரும் சண்டைகள்,

உடைத்து ஒட்டும்

முரட்டு வைத்தியமாய் காதல்.,

 

 

ஊடல்

சில நிமிடம் 25Lovers

சில மணிகள்

சில நாட்கள்

சில வாரங்கள்

என எல்லா காலக்கணக்கிலும்

ஆனால் முடித்துவைப்பது என்னவோ

காதலான காமம்தான்.

 

காதல் இல்லையெனில்

காமம் இல்லையெனில்

குடும்பங்களில்லை

 

காதல் இல்லையெனில்

காமம் இல்லையெனில்

குழந்தைகளில்லை

 

காதல் இல்லையெனில்

காமம் இல்லையெனில்

நாமும் இல்லை

 

family_silhouette_clip_artஉனக்காய் நானும்

எனக்காய் நீயும்

நமக்காய் குழந்தையும்

குழந்தைக்காய் நாமும்

 

விட்டுக்கொடுத்தல்

வாழ்க்கையை அர்த்தமாக்கும்

நாம் வாழ்வே

நம் குழுந்தைக்கானது

 

அதற்காகவேணும்

வாழ்வோம்

வாழ்க்கையை

வாழ்ந்து பார்ப்போமே

வாழ்க்கையை

 

எல்லோர் வாழ்க்கையும்

முயற்ச்சிதானே

விண்டவர் கண்டிலர்

கண்டவர் விண்டிலர்

 

வாழ்க்கையையும்

ஏராளக்கனவுகளுடன்

நீயும்

நானும்

 

கண்டது பலித்ததா

உயிர் பிரியும் அந்தக்கடைசி

நொடியில் கண்ணில் தெரியும்

 

பல நேரங்களில் தேவதையாய் நீ

ராட்சசனாய் நான்

சில நேரங்களில் ராட்சசியாய் நீ

தேவனாய் நான்

 

எலியாய் நீ

பூனையாய் நான்

இப்படிப்பல நேரங்களை ஆக்கியிருந்தாலும்

வாழ்க்கை சில காயங்களையும்

அதற்காய் மருந்துகளையும் நமக்கு தந்திருக்கிறது.

 

உனக்காய் நானும்

எனக்காய் நீயும்

சில,பல இழந்தும்

வாழ்க்கை இன்னும் மிச்சம் வைத்திருக்கிறது

இந்த கவிதை போல

 

வாழ்க்கையில்

முடியும்,மனமும்

நிறம் மாறலாம்!

மாறும்.

 

அதுவரை

நாமே மாற்ற முயற்ச்சிப்போம்.

 

வாழ்க்கையின் பாதியில்

மனம் மாறினால் பூரணம்

முடி மாறினால் மரணம்

பூரணத்திற்க்கு பிறகு

நம் வாழ்க்கை நமக்கில்லை

மரணத்திற்க்கு பிறகு நாமில்லை

.

..

...

.....

இன்னும் முடிக்கப்படாமல்

கவிதையும்

வாழ்க்கையும்

4 வகுத்தலும்:

கோல்ட்மாரி said...

வாழ்க்கையின் பாதியில்
மனம் மாறினால் பூரணம்
முடி மாறினால் மரணம்


எவ்ளோ பெரிய உண்மைய எவ்ளோ வேடிக்கையா சொல்லிருக்கிங்க :0

அருமையான கவிதையின் தொகுப்பு

மழைக்காலங்கள் said...

pala nerangalil devathayai nee!
ratsasanai naan
sila nerangalilratsasiyai nee
devanai naan

உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
சில,பல இழந்தும்
வாழ்க்கை இன்னும் மிச்சம் வைத்திருக்கிறது

இந்த கவிதை போல

romba alaga solliruka da ella kavithaiyaum romba "alagu"

ரிதன்யா said...

ஆமாம் தங்கம்,
வாழ்க்கையும்,உண்மையும் எப்போதுமே வேடிக்கையானதுதான்..

ரிதன்யா said...

ஆமாம் ரம்யா,
அழகை ,அழகாய்த்தானே சொல்ல முடியும்.. :-)