CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

வாழ்த்துகின்றேன் எளிமையாய்

புறங்கை கட்டி
தலை குனிந்து
தரை அளந்து
இருபது இயந்திரங்களிடை
இங்குமங்கும் அலைந்து
இனி வரும் வசந்தத்திற்கு
உனை வாழ்த்த
வாசகங்கள் தேடி
இரவும் பகலும் நகர்ந்திட
கிடைக்கவில்லை எனும் தவிப்புடன்
வாழ்த்துகின்றேன் எளிமையாய்............

எனக்கென்று ஒருத்தி

வட்ட முகம் நல்ல நிறம்

தோளுயரம்

கூர்மையான, நிறை புத்தி

தன் காலில் நிற்கும் தாரம்-

என என் கையில் ஓடும்

வரி பார்த்து வரைந்துவிட்டான்

எனக்கென்று ஒருத்தியை