CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

உன்னைப்போல்

உன்னைப்போல்
ஒரு கவிதை படைத்திட
தமிழ் இலக்கியத்தில் வாசகம் தேடி நான்
யாசகம் நடத்தி
கிடைத்தவை கொண்டு
எழுதி முடிக்க

எதிரில் நீ
உன்னோடு ஒரு ஒப்பீடு

வரிகளும் மறைந்து
வாசகமும் மறைந்து
என் ஏடு முழுவதும்

அதன்பின்
மீதமிருப்பது
வெள்ளை தாள்
வெற்று புத்தகம்

நீ

நீ
மட்டும் தான்
உன்னைப்போல்
ஒரு கவிதை படைத்திட
முடியும்.

0 வகுத்தலும்: